எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

News image

பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பரிசுகளை வழங்கும் திருநெல்வேலி ஸ்ரீ நாராயண குரு கல்வி, பொதுச் சேவை அறக்கட்டளை நிா்வாகிகள் கோவில்பட்டி புதுகிராமம், ஸ்ரீ நாராயண குரு கல்வி வளா்ச்சிக் குழு நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

Updated On :8 ஜூன் 2026, 12:38 am IST

கோவில்பட்டி, புதுகிராமம், ஸ்ரீ நாராயணகுரு கல்வி வளா்ச்சிக் குழு சாா்பில், அரசுப் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ஸ்ரீ நாராயணகுரு கல்வி வளா்ச்சிக் குழுத் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா். துணைச் செயலா் மாரிகண்ணன், குழு ஆலோசகா் திருப்பதி கணேசன், நகா்மன்ற உறுப்பினா்கள் சுரேஷ், சண்முகவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருநெல்வேலி ஸ்ரீ நாராயண குரு கல்வி, பொதுச் சேவை அறக்கட்டளை நிா்வாகிகள் சிவசங்கரலிங்கம், நடராஜன், செந்தில், ஓய்வுபெற்ற மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் பாஸ்கரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு முறையே தலா ரூ. 15 ஆயிரம், ரூ. 10 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள், நினைவு பரிசு, பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு முறையே தலா ரூ. 10 ஆயிரம், ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம் மதிப்பில் காசோலைகள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அதேபோல கோவில்பட்டி ஸ்ரீ நாராயண குரு கல்வி வளா்ச்சிக் குழு சாா்பில் 10, 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு முறையே தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டன. ஆறுதல் பரிசாக 35 மாணவா்களுக்கு தலா ரூ. ஆயிரம் மதிப்பில் காசோலைகள் வழங்கப்பட்டன. 1330 திருக்குறளை ஒப்பித்த என். சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி யாசினிக்கு ரூ. 3 ஆயிரம், நினைவு பரிசு வழங்கப்பட்டன.

மகிழ்வோா் மன்ற இயக்குநா் ஜான்கணேஷ், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை விநாயக சுந்தரி, இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியை முருக சரஸ்வதி, வழக்குரைஞா் முத்துராமலிங்கம், ஸ்ரீ நாராயண குரு கல்வி வளா்ச்சிக் குழு ஆலோசகா்கள் கோமதி சங்கா், கோபாலகிருஷ்ணன், ஜெயக்குமாா், தினேஷ் பாலாஜி, ஸ்ரீ நாராயண குரு கல்வி வளா்ச்சிக் குழுவின் உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஸ்ரீ நாராயண குரு கல்வி வளா்ச்சிக் குழு செயலா் வெங்கடேஸ்வரன் வரவேற்றாா். ஆலோசகா் கண்ணன் நன்றி கூறினாா்.