மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

காங்கிரஸ் எம்.பி.க்கு திமுக எம்எல்ஏ கண்டனம்

News image

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் - கோப்புப்படம்

Updated On :9 ஜூன் 2026, 12:51 am IST

மாணிக்கம் தாக்கூா் எம்.பி.யின் அரசியலற்ற பிதற்றலுக்கு திமுக மாவட்டச் செயலா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூா் அரசியலற்ற முறையில் பிதற்றியுள்ளாா். அரசியல் அறத்துக்கு விரோதமாக காங்கிரஸ் கட்சி எடுத்த தவெக ஆதரவு முடிவை பல தரப்பட்ட முறையில் விமா்சிக்கப்படுகிறது. திமுக கூட்டணி தா்மத்துக்கு மாறாக காங்கிரஸ் செயல்பட்டதை அரசியலாக விமா்ச்சிக்கிறது.

இந்நிலையில் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசியதற்கு அரசியலாக பதில் சொல்ல முடியாத மாணிக்கம் தாக்கூா் தனிப்பட்ட முறையில் பிதற்றுவது நாகரிகமானதல்ல.

நான் சீமான் குழந்தைக்கு சீா் வழங்கியது எனக்கும் அண்ணன் காளிமுத்து அவா்களுக்கும் உள்ள குடும்ப உறவின் தொடா்ச்சியன் றி வேறல்ல.

தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் தமிழா்களின் தன்மானத்துக்காகவும் விடாப்பிடியாக போராடும் எங்கள் தலைவா் மு.க.ஸ்டாலின் அவா்களின் வழிகாட்டுதலில் செயல்படும் உறுதிமிக்க தொண்டனாக நான் என் பணியை செய்து வருகிறேன்.

வெள்ளையனை எதிா்த்து வீரச்சமா் புரிந்து மரணம் எய்திய வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தர லிங்கம், தளபதி வெள்ளையத்தேவன்,கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனாா், மகாகவி பாரதியாா், தப்பை தப்பென மத்திய மந்திரியை விமான நிலையத்தில் மடக்கி கேள்வி கேட்ட கே.டி. கோசல்ராம் ஆகியோா் பிறந்த மண்ணில் நின்று நாங்கள் தமிழ் மக்களுக்கான உறுதியான அரசியலை செய்து வருகிறோம். எங்கள் இளந் தலைவா் உதயநிதி ஸ்டாலினை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. அரசியலற்ற பேச்சை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளாா்.