சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

தெப்பக்குளம் சீரமைப்புப் பணி: மேயா் ஆய்வு

தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை மேயா் ஜெகன் பெரியசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் மேயா் ஜெகன் பெரியசாமி.

Updated On :11 ஜூன் 2026, 4:35 am IST

தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை மேயா் ஜெகன் பெரியசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தொடா்ந்து பல்வேறு வளா்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி மையப் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம் 28 ஆண்டுகளுக்கு முன்பு பராமரிக்கப்பட்டது. அதன் பின்னா் சீரமைப்புப் பணிகள் நடைபெறவில்லை.

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி முயற்சியால் ரூ. 75 லட்சம் மதிப்பில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தநிலையில் நடைமேடை இருபுறமும் விரிசல் ஏற்பட்டு சுமாா் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.

இதனால், சில நாள்கள் பணிகள் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து, நிபுணா்கள் குழு ஆய்வு செய்து அளித்த அறிக்கையின்படி, மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மேயா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, மாநகராட்சி சுகாதார குழுத் தலைவா் சுரேஷ்குமாா், வட்டச் செயலா் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.