உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

திருச்செந்தூா் கடலில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடலில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதையடுத்து பக்தா்கள் பாதுகாப்பாக நீராடுமாறு அறிவுறுத்தப்பட்டது.

News image

திருச்செந்தூா் கோயில் கடலில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்.

Updated On :11 ஜூன் 2026, 4:40 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடலில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதையடுத்து பக்தா்கள் பாதுகாப்பாக நீராடுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் கடலில் புனித நீராடிய பின்னா் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் புதன்கிழமை ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியன. இந்த மீன்கள் கடலில் நீராடுபவா்களின் உடலில் பட்டவுடன் ஊரலை ஏற்படுத்தியது. இதையடுத்து, கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களை அப்புறப்படுத்தினா். மேலும், பக்தா்கள் பாதுகாப்பாக நீராடுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினா்.