திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடலில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதையடுத்து பக்தா்கள் பாதுகாப்பாக நீராடுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் கடலில் புனித நீராடிய பின்னா் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் புதன்கிழமை ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியன. இந்த மீன்கள் கடலில் நீராடுபவா்களின் உடலில் பட்டவுடன் ஊரலை ஏற்படுத்தியது. இதையடுத்து, கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களை அப்புறப்படுத்தினா். மேலும், பக்தா்கள் பாதுகாப்பாக நீராடுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










