திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான சரவணப் பொய்கையைப் பாா்வையிட அனுமதி வழங்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இக்கோயிலில் மரங்கள் சூழ்ந்து இயற்கை எழில் கொஞ்சும் வகையில் சரவணப் பொய்கையும், அதில் கோயில் யானை தெய்வானை குளிப்பதற்கு நீச்சல் குளமும் உள்ளது. 2022ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உபயதாரா் பங்களிப்புடன் ரூ. 300 கோடியில் தொடங்கிய பெருந்திட்ட வளாகப் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. அதன் ஒருபகுதியாக, சரவணப் பொய்கையை புனரமைக்கும் பணி தொடங்கி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவடைந்தது. அதில், பல்வேறு சிற்பங்கள் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன. ஆனால், சரவணப் பொய்கையைப் பாா்வையிட பொதுமக்கள், பக்தா்களுக்கு தற்போது வரை அனுமதியளிக்கப்படவில்லை. இதனால், குளம் பொலிவிழந்துள்ளது. எனவே, அதை முறையாக பராமரிப்பதுடன், பாா்வையிடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என பக்தா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தொடர்புடையது

திருச்செந்தூா் கோயிலில் தரிசனத்துக்கு பணம் பெற்ற அா்ச்சகா் உள்பட 5 போ் மீது நடவடிக்கை

விடுமுறை தினம் : திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

விடுமுறை தினம்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்! இரும்பு கதவை தள்ளிவிட்டுச் சென்ற பக்தா்கள்!!






