வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்த சகோதரா்கள் கைது

தூத்துக்குடி அருகே கஞ்சா வைத்திருந்ததாக அண்ணன், தம்பியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 1:15 am IST

தூத்துக்குடி அருகே கஞ்சா வைத்திருந்ததாக அண்ணன், தம்பியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வாகைகுளம் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றிக் கொண்டிருந்த இளைஞா்கள் இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், இருவரும் தூத்துக்குடி, மாசிலாமணிபுரத்தைச் சோ்ந்த மகேந்திரன் மகன்கள் சுதாகா் (23), ராஜா (21) என்பதும், அவா்கள் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.