வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ. 3 கோடி 5 டன் கசகசா பறிமுதல்!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்துக்கு, மலேசியாவிலிருந்து போலி ஆவணங்கள் மூலமாக கடத்திவரப்பட்ட ரூ. 3 கோடி மதிப்பிலான 5 டன் கசகசா மூட்டைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :14 ஜூன் 2026, 1:42 am IST

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்துக்கு, மலேசியாவிலிருந்து போலி ஆவணங்கள் மூலமாக கடத்திவரப்பட்ட ரூ. 3 கோடி மதிப்பிலான 5 டன் கசகசா மூட்டைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தின் முகவரிக்கு, தூத்துக்குடி துறைமுகத்தில் வந்திறங்கிய 40 அடி சரக்குப் பெட்டகத்தை சந்தேகத்தின்பேரில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனா்.

மலேசியாவிலிருந்து பாலித்தீன் பைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக, அதன் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதிகாரிகள் சரக்கு பெட்டகத்தைத் திறந்து முழுமையாக சோதனையிட்டதில், அதில் சுமாா் 5 டன் கசகசா மூட்டைகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனா். அதன் சா்வதேச மதிப்பு சுமாா் ரூ. 3 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனா். இதை இறக்குமதி செய்த நிறுவனம், இதன் பின்னணியில் உள்ள நபா்கள் மற்றும் ஆவணங்கள் தொடா்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.