ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

போக்ஸோ குற்றவாளிக்கு ஆயுள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை போலீஸாரால் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.17,500 அபராதம் விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:36 am IST

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை போலீஸாரால் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.17,500 அபராதம் விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

மதுரை காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் காா்த்திகேயன் (32). இவா், கடந்த 2021ஆம் ஆண்டு கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், கழுகுமலை போலீஸாா் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி பிரீத்தா வழக்கை விசாரித்து, காா்த்திகேயனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.17,500 அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.