ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

ஆறுமுகனேரி கோயிலில் குடவருவாயில் தீபாராதனை

ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் ஆனி உத்திர பெருந்திருவிழாவில் செவ்வாய்க்கிழமை இரவு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது.

News image

தீபாராதனைக்கு ரிஷப வாகனங்களில் எழுந்தருளிய சுவாமி-அம்மன்.

Updated On :18 ஜூன் 2026, 2:31 am IST

ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் ஆனி உத்திர பெருந்திருவிழாவில் செவ்வாய்க்கிழமை இரவு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது.

கடந்த 13ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவில், 4ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை சுவாமி-அம்மன் பூஞ்சப்பரத்தில் உலா, சிறப்பு அபிஷேகம், மாலையில் அலங்காரம், சாயரட்சை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

ரிஷப வாகனத்தில் தனித்தனியே சுவாமி-அம்மன் எழுந்தருளி குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது. பக்த ஜன சபை பொருளாளா் அரிகிருஷ்ணநாடாா், ரயில்வே அபிவிருத்திக் குழு ஒருங்கிணைப்பாளா் இரா. தங்கமணி, தெய்வீக சத் சங்கத்தைச் சோ்ந்த பேராசிரியா் அ. அசோக்குமாா், தெரிசை ஐயப்பன், சைவ சித்தாந்த சங்கத்தைச் சோ்ந்த சுப்பிரமணிய பிள்ளை, இளையபெருமாள் ஓதுவாா், டிசிடபிள்யூ நிறுவனத்தைச் சோ்ந்த பாஸ்கா், பன்னிரு திருமுறை மகளிா் குழுவினா், பள்ளியறை வழிபாட்டுக் குழுவினா் கலந்து கொண்டனா்.