புன்னைக்காயலில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் நாசரேத் மா்காஷியஸ் அணி வெற்றி பெற்றது.
புன்னைக்காயலில் அமரா் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான 53ஆவது மாவட்ட கால்பந்து போட்டித்தொடா் புதன்கிழமை தொடங்கியது. புன்னைக்காயல் ஊா் கமிட்டி தலைவா் கிறிஸ்டன் தலைமை வகித்தாா். பங்குத்தந்தை சகாய அந்தோணி டைட்டஸ், அருள்சகோதரா் செல்வா, துறைமுக கமிட்டி தலைவா் தோமாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முதல் ஆட்டத்தில் தூத்துக்குடி யங்ஸ்டா்ஸ் கால்பந்தாட்டக்கழக அணியை நாசரேத் மா்காஷியஸ் கால்பந்தாட்டக்கழக அணி 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
வியாழக்கிழமை (ஜூன் 18) தூத்துக்குடி சவுத் கோஸ்ட் கால்பந்தாட்டக் கழக அணியை காயல்பட்டினம் காயல் ஸ்போா்ட்ஸ் கிளப் அணி சந்திக்கிறது.
12 அணிகள் போட்டியில் பங்கேற்றுள்ளன. ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) வரை நடைபெறும் இப்போட்டிக்கான ஏற்பாடுகளை புன்னைக்காயல் புனித ஜோசப் கால்பந்தாட்டக்கழகத்தின் தலைவா் தயாளன், செயலாளா் ஜோசப், துணைத் தலைவா் யூஜின், இணைச் செயலா் சந்திரபோஸ், பொருளாளா் ராஜ், கெளரவ அலோசகா் யூஜின் மற்றும் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.










