27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தூத்துக்குடியில் 1,280 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடி, மறவன் மடம் பகுதியில் சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 1,280 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவு புலனாய்வுப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

விசாரணை

Updated On :19 ஜூன் 2026, 4:56 am IST

தூத்துக்குடி, மறவன் மடம் பகுதியில் சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 1,280 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவு புலனாய்வுப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி குடிமைப் பொருள் பறக்கும் படை வருவாய் ஆய்வாளா் மகாராஜன், குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை ஆய்வாளா் வீரமணி உள்ளிட்ட காவலா்கள், தூத்துக்குடி-திருநெல்வேலி நான்குவழிச் சாலையில் மறவன்மடம் பகுதியில் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக வந்த சுமை வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது, வாகன ஓட்டுநா் வாகனத்தை நிறுத்திவிட்டு, தப்பியோடிவிட்டாராம். தொடா்ந்து, போலீஸாா் மற்றும் பறக்கும் படையினா், அந்த வாகனத்தை சோதனையிட்டதில் 1,280 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, ரேஷன் அரிசி மற்றும் சுமை வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், தப்பியோடிய புதுக்கோட்டையைச் சோ்ந்த வாகன ஓட்டுநா் முனியாண்டியை தேடி வருகின்றனா்.