27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 4 போ் கைது

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட லெவஞ்சிபுரம் பகுதியில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதாக 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 4:54 am IST

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட லெவஞ்சிபுரம் பகுதியில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதாக 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதாக தூத்துக்குடி, அண்ணா நகரைச் சோ்ந்த கோபி கண்ணன் (34), நாராயணசாமி (40), முத்தையாபுரம் பகுதியைச் சோ்ந்த நவீன் ராஜா (26), யோகீஸ்வரா் காலனியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (53) ஆகியோரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், வழக்குப் பதிந்த போலீஸாா், கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து எண்கள் எழுதிய துண்டுத் தாள்கள், ரூ. 10,190 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.