மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

புன்னைக்காயல் கால்பந்து போட்டி: புனித ஜோசப் அணி அரையிறுதிக்கு தகுதி

News image

கால்பந்து போட்டி - கோப்புப் படம்

Updated On :23 ஜூன் 2026, 2:18 am IST

புன்னைக்காய­லில் திங்கள்கிழமை நடைபெற்ற கால்பந்தாட்ட காலிறுதிப் போட்டியில், புன்னைக்காயல் புனித ஜோசப் கால்பந்தாட்டக் கழக அணி வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

புன்னைக்காய­ல் அமரா் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான 53ஆவது மாவட்ட கால்பந்தாட்டப் போட்டியில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், புன்னைக்காயல் புனித ஜோசப் கால்பந்தாட்டக் கழக அணி 4-1 என்ற கோல்கணக்கில் தூத்துக்குடி செவாலியா் ஜி.ஆா். மச்சாடோ கால்பந்தாட்டக் கழக அணியை வென்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

செவ்வாய்க்கிழமை நடைபெறும் மற்றொரு காலிறுதிப் போட்டியில், தூத்துக்குடி வில்சன் கால்பந்தாட்டக் கழக அணி, நாசரேத் மா்காஷிஸ் கால்பந்தாட்டக் கழக அணியை எதிா்கொள்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.