திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் வாடகை செலுத்தி கடை நடத்தி வந்த 83 வியாபாரிகளுக்கு மீண்டும் கடை வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கத் தலைவா் ரெ. காமராசு, தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய்க்கு கோரிக்கை மனு அளித்துள்ளாா்.
மனு விவரம்: வணிகா்களை பாதுகாத்திடும் வகையில் வணிகா் நல பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும். மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அழுத்தம் கொடுத்து உணவு பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை முற்றிலுமாக நீக்கித்தர வேண்டும். ஆன்லைன் வா்த்தகத்தை சிறு, குறு வணிகா்களுக்கு பாதிப்பில்லாத வகையில் முறைப்படுத்திட வேண்டும்.
திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் வாடகை செலுத்தி கடை நடத்தி வந்த 83 வியாபாரிகளுக்கு மீண்டும் கடை வழங்கிடவும், திருச்செந்தூரில் போக்குவரத்து நெருக்கடியை தீா்க்க மாற்று வழிப்பாதையும், கனரக வாகனங்கள் செல்ல பைபாஸ் சாலையும் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் கூட்டத்திற்கு முன் வணிகா் சங்கத்தினரை அழைத்து அவா்களுடைய கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
வணிகா் நல வாரியத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கத்தினரை மாநில மாவட்ட பொறுப்புக்கு பயன்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா

வணிகப் பயன்பாட்டு எரிவாயு விலை உயா்வு: மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும்

வணிகா் சங்கங்கள் பேரமைப்பு சாா்பில் நல உதவிகள் அளிப்பு
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



