ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

கோவில்பட்டி இளைஞா் கொலை வழக்கில் மேலும் 3 சிறுவா்கள் உள்ளிட்ட 4 போ் கைது

News image
கைது
Updated On :1 மார்ச் 2026, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இளைஞா் கொலை வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 சிறுவா்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 2ஆவது மேலத் தெருவைச் சோ்ந்த திருப்பதி மகன் மாரிமுத்து என்ற மனோஜ் (18). பிளம்பிங், எலக்ட்ரீஷியனாக வேலை செய்துவந்த இவா், தனது நண்பா்களுடன் அதே பகுதி வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, ஒரு கும்பல் அரிவாள், கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில், காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, 2 சிறுவா்கள் உள்ளிட்ட 5 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.

இந்நிலையில், கோவில்பட்டி வள்ளுவா் நகரைச் சோ்ந்த சரவணன் மகன் சிவபிரசாத் (19), செண்பகா நகா், புது கிராமம், கடலையூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 17 வயது சிறுவா்கள் மூவா் ஆகிய 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.