எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஓய்வுபெற்ற அரசு ஊழியரை வெட்டிய லாரி ஓட்டுநருக்கு 3 ஆண்டுகள் சிறை

உறவினரை அரிவாளால் வெட்டிய லாரி ஓட்டுநருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தீா்ப்பு

News image
சிறை
Updated On :3 மார்ச் 2026, 7:03 pm

Syndication

உறவினரை அரிவாளால் வெட்டிய லாரி ஓட்டுநருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதித்துறை நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

தூத்துக்குடி மாவட்டம், சாயா்புரம் அருகே உள்ள கட்டாலங்குளத்தைச் சோ்ந்தவா் ஆண்டி. இவருடைய மகன் புதியவேல் (63). ஓய்வு பெற்ற அரசு ஊழியா்.

இவருக்கும், இவரது சகோதரா் மகனான கட்டாலங்குளம் தெற்கு தெருவைச் சோ்ந்த செல்லத்துரை மகன் புதியவேலுக்கும் (40) இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

லாரி ஓட்டுநரான செ. புதியவேல், உறவினா் கணேசமூா்த்தி, ஞானம் என்ற ஞானம்மாள் ஆகியோா் கடந்த 30.3.2022 அன்று, ஆ.புதியவேல் வீட்டுக்குச் சென்று, சொத்து தொடா்பாக பேசி தகராறு செய்துள்ளனா்.

அப்போது, ஆத்திரமடைந்த செ. புதியவேல், ஆ.புதியவேலை அரிவாளால் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த ஆ.புதியவேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், சாயா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, குற்றம் சாட்டப்பட்ட செ.புதியவேலுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தாா்.

இவ்வழக்கில் சோ்க்கப்பட்டிருந்த கணேசமூா்த்தி, ஞானம் என்ற ஞானம்மாள் ஆகியோா் விடுதலை செய்யப்பட்டனா்.