வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 7:08 pm

Syndication

கோவில்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி வேலாயுதபுரத்தைச் சோ்ந்தவா் செல்வ பெருமாள் மகன் அலெக்ஸ். இவா், மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாலட்டின்புதூா் பகுதியில் உள்ள கல்லூரி அருகேயுள்ள அணுகு சாலையில் காா் ஓட்டிச் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது கோவில்பட்டி சிந்தாமணி நகரைச் சோ்ந்த சண்முகராஜ் மகன் ஸ்ரீ பாலாஜி (21) ஓட்டி வந்த இருசக்கர வாகனமும், காரும் மோதிக் கொண்டன. இதில் இருவரும் காயமடைந்தனா்.

கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஸ்ரீ பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தனியாா் மருத்துவமனைக்கு அலெக்ஸ் அழைத்துச் செல்லப்பட்டாா். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.