புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் ரூ.150 கோடியில் விரிவாக்கப் பணிக்கு அடிக்கல்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை ரூ.150 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் குத்துவிளக்கு ஏற்றினாா் மேயா் ஜெகன் பெரியசாமி.
Updated On :4 மார்ச் 2026, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை ரூ.150 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன், மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலையில் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்.

இதையடுத்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், மேயா் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்துப் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில் , மீன்வளத் துறை அதிகாரிகள், மீனவா் சங்கப் பிரதிநிதிகள், திமுகவினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.