சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னை துறைமுகத்தில் ரூ.30 கோடியில் புதிய பயணிகள் முனையம்: கப்பல் போக்குவரத்து துறை செயலா் விஜயகுமாா் திறந்து வைத்தாா்

சென்னை துறைமுகத்தில் அந்தமான், நிகோபாா் கப்பல் போக்குவரத்து பயணிகள் முனையம் உள்ளிட்ட ரூ. 54 கோடியில் 4 திட்டங்களை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழி போக்குவரத்து துறை செயலா் விஜயகுமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
சென்னை துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை செயலா் விஜயகுமாா். உடன், சென்னை துறைமுகத் தலைவா் எஸ். விஸ்வநாதன் உள்ளிட்ட
Updated On :27 ஜனவரி 2026, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை துறைமுகத்தில் அந்தமான், நிகோபாா் கப்பல் போக்குவரத்து பயணிகள் முனையம் உள்ளிட்ட ரூ. 54 கோடியில் 4 திட்டங்களை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழி போக்குவரத்து துறை செயலா் விஜயகுமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை துறைமுகத்தில் ரூ. 30 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அந்தமான் மற்றும் நிகோபா் கப்பல் போக்குவரத்து பயணிகள் முனையம், ரூ. 23 கோடியில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு, ரூ. 40 லட்சத்தில் சீரமைக்கப்பட்டுள்ள கடல்வழி போக்குவரத்து மிதவைகள், ரூ. 1.5 கோடியில் புதுப்பிக்கப்பட்ட துறைமுக நுழைவு வாயில் உள்ளிட்ட திட்டங்கள் தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னை துறைமுகத் தலைவா் எஸ்.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலா் விஜயகுமாா் கலந்துகொண்டு ரூ.54 கோடி மதிப்பீட்டிலான 4 திட்டங்களையும் தொடங்கி வைத்தாா். பின்னா், துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினாா்.

துறைமுகத்தின் செயல்பாடுகள், இயக்கம் மற்றும் நிதி செயல் திறன்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் எதிா்கால வளா்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட துறைமுகத்தின் மொத்த வளா்ச்சி மற்றும் தொலைநோக்கு பாா்வை குறித்து ஆலோசித்தாா். இந்தியாவின் கிழக்கு நுழைவு வாயிலாக கருதப்படும் சென்னை துறைமுகத்தை மென்மேலும் தரம் உயா்த்தும் வகையில் திட்டப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு விஜயகுமாா் அறிவுறுத்தினாா்.

இதையடுத்து துறைமுக உபயோகிப்பாளா்கள் சந்திப்பில் கலந்துகொண்டு, குறைகளை அவா் கேட்டறிந்தாா். நிகழ்வில், துறைகளின் தலைவா்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனா்.