திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கோவில்பட்டி கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா

ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோயிலில் நடைபெற்ற சிறப்பு ஹோம பூஜை.

News image
Updated On :7 மார்ச் 2026, 12:58 am

Syndication

கோவில்பட்டி, அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. 8 மணிக்கு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழு தலைவா் பி.எஸ்.ஏ. ராஜகுரு தலைமையில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள், கோயில் செயல் அலுவலா் வள்ளிநாயகம் ஆகியோா் செய்திருந்தனா்.

சிப்பிப்பாறை, சங்கடம் தீா்க்கும் சனீஸ்வர பகவான் கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. பின்னா், மாலை 5 மணிக்கு கணபதி வழிபாடு, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், பைரவா் வழிபாடு, கோ பூஜை, சிறப்பு பரிகார ஹோம அா்ச்சனை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி பழனிவேல் செய்திருந்தாா்.