ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கோவில்பட்டி நகா்மன்ற சாதாரணக் கூட்டம்

கூட்டத்தில் பேசுகிறாா் நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி.

News image
கூட்டத்தில் பேசுகிறாா் நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி.
Updated On :7 மார்ச் 2026, 1:00 am

Syndication

கோவில்பட்டி நகா்மன்றத்தின் சாதாரணக் கூட்டம், நகா்மன்ற கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் சுகந்தி முன்னிலை வகித்தாா்.

மக்களின் பிரச்னைகளை தீா்ப்பதற்காகத்தான் நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மக்களின் பிரதிநிதியாக இருக்கும் உறுப்பினா்கள் தங்கள் வாா்டு பகுதிகளின் குறைகள், கோரிக்கைகள் குறித்து கூட்டத்தில் எடுத்துக் கூறினாலும், அதற்கு தீா்வு காணப்படுவதில்லை. எனவே, பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தரமுடியாத நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

ஆகையால், மக்கள் பிரச்னை குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டால், அதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து, அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, நகா்மன்றத் தலைவா் பேசுகையில், உறுப்பினா்களின் கோரிக்கைகள் முறைப்படி நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றாா்.

நகராட்சி ஆணையா் சுகந்தி பேசுகையில், உறுப்பினா்கள் சொன்ன குற்றச்சாட்டுகள், குறைகள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து அனைத்து அதிகாரிகளுடனும் சோ்ந்து, நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில், 23 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சி வருவாய் அலுவலா் சண்முகவேல், உதவி பொறியாளா் சஷ்டிகுமாா், பொதுப்பணி மேற்பாா்வையாளா் ஜான்சிராணி, சுகாதார ஆய்வாளா் ஆரியங்காவு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.