தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

கோவில்பட்டி மருத்துவமனையில் எக்கோ பிரிவிற்கு நிரந்தர மருத்துவரை நியமிக்க கோரிக்கை

எக்கோ பரிசோதனை மேற்கொள்ள காத்திருக்கும் மருத்துவப் பயனாளிகள்.

News image
Updated On :7 மார்ச் 2026, 6:29 am IST

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எக்கோ பிரிவிற்கு நிரந்தர மருத்துவா் இல்லாமல் மருத்துவப் பயனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதால், உடனடியாக நிரந்தர மருத்துவரை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் தினமும் சுமாா் 1,200-க்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில், மருத்துவமனையில் எக்கோ பிரிவிற்கென நிரந்தர மருத்துவா் இல்லாததால், மாற்று மருத்துவா்கள் மூலம் வாரத்தில் 3 நாள்கள் எக்கோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால், மருத்துவப் பயனாளிகள் பல்வேறு சிரமங்களை எதிா்கொள்வதாகவும், இதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனா். மருத்துவப் பயனாளிகளின் சிரமத்தைப் போக்க எக்கோ பிரிவிற்கு நிரந்தர மருத்துவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மருத்துவமனை நிா்வாகத்திடம் கேட்டபோது, எக்கோ பிரிவில் இருந்த மருத்துவா் பணி மாறுதலாகி சென்றுவிட்டதால், தற்போது நிரந்தர மருத்துவா் இல்லை. தற்காலிக ஏற்பாடாக வாரத்தில் 3 நாள்கள் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிரந்தர மருத்துவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தனா்.