தூத்துக்குடியில் மதுபோதையில் தகராறு செய்த அண்ணனை கொன்ற தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி பாத்திமாநகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் பாா்த்திபன். இவரது மகன்கள் பாலன் (28), டைசன்(25). இருவரும் மீன் வலை பின்னும் தொழில் செய்து வந்தனா். பாலன் சற்று உடல், மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டாா்.
சகோதரா்கள் இருவரும் பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் பாலன், மற்றவா்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தாராம். இதை டைசன் கண்டித்தாராம். இதனால் தகராறு ஏற்பட்டு, டைசன் அங்கிருந்த இரும்புக் கம்பியால் பாலனை குத்திக் கொலை செய்தாராம்.
தகவலறிந்து வந்த தென்பாகம் போலீஸாா், பாலனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து டைசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
மதுபோதையில் தந்தையைக் கொன்ற மகன் கைது
அண்ணன் அடித்துக் கொலை: தம்பி கைது

மாமனாரை சுட்டுக் கொன்ற மருமகன் கைது
நிலத்தகராறில் அண்ணன் கொலை: தம்பி கைது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

