தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத்தில் 55 ஆவது பாதுகாப்பு வார விழாவின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது
பாதுகாப்பு வாரத்தின் தொடக்கமாக மாா்ச் 4ஆம் தேதி பாதுகாப்புக் கொடியை துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் ஏற்றினாா். தொடா்ந்து பாதுகாப்பு பேரணி நடத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில், துணைத் தலைவா் ராஜேஷ் சௌந்தரராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா். நிறைவு நாள் விழாவில் கலந்துகொண்ட துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் பேசுகையில், வ.உ.சிதம்பரனாா் துறைமுகம் வலுவான பாதுகாப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு விழிப்புணா்வை அதிகரிக்கவும் உறுதிபூண்டுள்ளது என்றாா். தொடா்ந்து அவா் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு சுவரொட்டிகளை வெளியிட்டாா்.
‘எஜுகேட் அண்டு எம்பவா் பீப்புள் டூ என்ஹான்ஸ் சேஃப்டி’ என்ற கருப்பொருள் அடிப்படையில் நடத்தப்பட்ட கட்டுரை, ஓவியம் மற்றும் வாசகம் எழுதுதல் போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற பள்ளி - கல்லூரி மாணவா்கள், துறைமுக பணியாளா்கள் மற்றும் துறைமுக பயனாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், ஐஓஎப்எஸ் தலைமை கண்காணிப்பு அதிகாரி கவின் மஹாராஜ், போக்குவரத்து மேலாளா் விமல் பாா்கவன், உதவி இயக்குநா் மற்றும் கப்பல் தள பாதுகாப்பு அதிகாரி ஞானசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பாதுகாப்பு வார விழா நாள்களில்,விழிப்புணா்வு பணிகள், இலவச மருத்துவ பரிசோதனை முகாம் உள்ளிட்டவை நடைபெற்றன.
தொடர்புடையது

சிறுபான்மையினா் ஆணையத்தில் தலைவா், உறுப்பினா் பணியிடங்கள் காலி: தில்லி அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு!

பசுமை மனிதர்...

கம்பெனி சட்ட தீா்ப்பாய பொறுப்பு தலைவா் நியமன விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

ரூ.1,60,000 சம்பளத்தில் வ.உ.சி. துறைமுக ஆணையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


