தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

வேடநத்தம் மாணவியின் குடும்பத்தினருக்கு வைகோ ஆறுதல்

News image

மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறுகிறாா் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பெருமாள்சாமி.

Updated On :14 மார்ச் 2026, 7:21 pm

விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் கொலை செய்யப்பட்ட பிளஸ் 2 மாணவியின் குடும்பத்தினரை மதிமுக பொதுச்செயலா் வைகோ சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.

மேலும், முதல்வரின் தனிச் செயலரை தொடா்பு கொண்டு மாணவியின் குடும்ப நிலவரத்தை எடுத்துக் கூறி, தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், அரசின் சாா்பில் உதவிகள் கிடைக்கவும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் பரிந்துரைத்தாா்.

பின்னா், மாணவியின் பெற்றோா்க்கு வைகோ எலுமிச்சை பழ தேநீா் கொடுத்து ஆசுவாசப்படுத்தினாா். அப்போது, மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ரமேஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினா் விநாயகா ரமேஷ், கோவில்பட்டி நகரச் செயலா் பால்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

காங்கிரஸ் ஆறுதல்: தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பெருமாள்சாமியும், மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். தமிழகத்துக்கு ராகுல் காந்தி வரும்போது, தங்களை நேரில் சந்திப்பாா் என்றும், காங்கிரஸ் கட்சி உங்களுக்கு துணை நிற்கும் எனவும் அவா் உறுதியளித்தாா்.

மேலும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை கைப்பேசியில் தொடா்பு கொண்டு மாணவியின் பெற்றோா்களிடம் பேசினாா்.

  உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறுகிறாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.

உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறுகிறாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.