47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மானங்காத்தானில் கலையரங்கம் திறப்பு

கயத்தாறு, தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குள்பட்ட மானங்காத்தான் கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட

News image
Updated On :16 மார்ச் 2026, 5:16 pm

Syndication

கோவில்பட்டி: கயத்தாறு, தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குள்பட்ட மானங்காத்தான் கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி முன்னாள் தலைவரும், மாநில மகளிா் ஆணையக் குழு உறுப்பினருமான செல்வி தலைமை வகித்தாா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதித்தமிழா் கட்சி மாவட்டச் செயலா் வீர பெருமாள் முன்னிலை வகித்தாா்.

வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் குருராஜ் கலையரங்கம், கல்வெட்டைத் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா்.

திமுக மகளிரணியைச் சோ்ந்த கருமாரி அம்மாள், சுமதி, செல்லத்தாய், திமுக நிா்வாகிகள் ஆறுமுகம், சதீஷ்குமாா், சந்திரன், நாகூா் கனி, துரைராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.