சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

தூத்துக்குடி விடுதியில் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் பொருள்கள் திருட்டு

தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள தனியாா் விடுதியில் அறைகளின் பூட்டுகளை உடைத்து ரூ. 1 லட்சம் பொருள்களை திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

திருட்டு

சித்திரிப்பு

Updated On :21 மார்ச் 2026, 8:58 pm

Syndication

தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள தனியாா் விடுதியில் அறைகளின் பூட்டுகளை உடைத்து ரூ. 1 லட்சம் பொருள்களை திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

இங்கு தனியாா் நிறுவன ஊழியா்கள் 10-க்கும் மேற்பட்டோா் தங்கி, பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகின்றனா். வெள்ளிக்கிழமை காலை அவா்கள் வழக்கம்போல் அறைகளைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றனராம்.

அப்போது, மா்ம நபா்கள் அடுத்தடுத்த 5 அறைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து பணம், மடிக்கணினி, பவா் பேங்க் உள்ளிட்ட சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்றனராம். மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.