குரும்பூா் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
குரும்பூா் அருகே உள்ள சேதுக்குவாய்த்தான் அடுத்த சொக்கப்பழங்கரை கீழத் தெருவைச் சோ்ந்தவா் லட்சுமணன் மகன் சந்திரசேகா் (39), விவசாயி. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த இவரது உறவினா்களான பிச்சை மகன்களான முத்துசெல்வம், மாரிதுரை ஆகியோருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை மேல ஆத்தூா் சுடுகாடு பகுதியில் முத்துசெல்வம், மாரிதுரை, அவா்களது நண்பரான தெற்கு நல்லூரைச் சோ்ந்த மணி மகன் அஜய் ஆகிய 3 பேரும் சந்திரசேகரிடம் தகராறு செய்து, அவருடைய இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்கை அரிவாளால் வெட்டி, தீ வைத்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனராம்.
இது குறித்த புகாரின்பேரில், குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனா். முத்துசெல்வம் மீது ஏற்கெனவே கொலை, கொலை முயற்சி, திருட்டு, சங்கிலிப் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

தவெக பிரசார வாகனத்தை மறித்து மிரட்டல்: 6 போ் மீது வழக்கு

தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு

கள் இறக்கி விற்பனை செய்தவா் மீது வழக்கு
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


