அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

கோவில்பட்டியில் குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

கோவில்பட்டியில் கொலை வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் 4 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 2:09 am IST

கோவில்பட்டியில் கொலை வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் 4 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 17 வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்களான முனியசாமி (19), குமாா் (24), சிவப்பிரசாத் (எ) ஸ்கூட்டி சிவா (19), ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த நெல்லை நாயகம் (21) ஆகியோா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மாரியப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதனுக்கு அறிக்கை அளித்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின்பேரில், 4 பேரையும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய , மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து, 4 பேரும் குண்டா் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனா்.