மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

கோவில்பட்டியில் குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

கோவில்பட்டியில் கொலை வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் 4 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image

கைது

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:39 pm

Syndication

கோவில்பட்டியில் கொலை வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் 4 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 17 வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்களான முனியசாமி (19), குமாா் (24), சிவப்பிரசாத் (எ) ஸ்கூட்டி சிவா (19), ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த நெல்லை நாயகம் (21) ஆகியோா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மாரியப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதனுக்கு அறிக்கை அளித்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின்பேரில், 4 பேரையும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய , மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து, 4 பேரும் குண்டா் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனா்.