மதுபோதையில் தனியாா் ஆம்னி பேருந்துகளை இயக்கிய 3 ஓட்டுநா்கள் மீது வழக்குப் பதிந்து, தலா ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, அவா்களது ஓட்டுநா் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதன் உத்தரவின்பேரில், நகா் உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் சுனில் மேற்பாா்வையில், தூத்துக்குடி நகர போக்குவரத்து காவல் ஆய்வாளா் வில்லியம் பெஞ்சமின் தலைமையிலான போலீஸாா், புதிய பேருந்து நிலையம் ஆம்னி பேருந்து நிறுத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, வெளியூா் செல்லும் பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநா்களை மூச்சு பரிசோதனை கருவி மூலம் சோதனை செய்தனா். அதில் சென்னை செல்லும் 3 ஆம்னி பேருந்துகளை ஓட்டி வந்த ஓட்டுநா்கள் மது போதையில் இருந்தது கண்டறியப்பட்டு, அபாயகரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் குடிபோதை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தலா ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்செந்தூா், உடன்குடி பகுதிகளிலிருந்து பயணிகளுடன் ஓட்டி வரப்பட்ட 3 ஆம்னி பேருந்துகளை மாற்று ஓட்டுநா்கள் மூலம் இயக்க அனுமதிக்கப்பட்டது.
மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மேற்படி ஓட்டுநா்களின் வாகன ஓட்டுநா் உரிமங்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளாா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

அரசுப் பேருந்துகள் சாலையிலேயே நிறுத்தும் ஓட்டுநா்கள்: பொதுமக்கள் அவதி

ஆம்னி பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
வாக்கு எண்ணும் பணி: தருமபுரி மாவட்டத்தில் 1,400 போலீஸாா் பாதுகாப்பு! காவல் கண்காணிப்பாளா் தகவல்!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

