வங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

திருச்செந்தூா் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்எல்ஏ!

சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றதையடுத்து, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ திருச்செந்தூா் தொகுதி மக்களை சனிக்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

News image

திருச்செந்தூா் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்தபோது, உற்சாகமாக சிலம்பம் ஆடிய அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.

Updated On :17 மே 2026, 2:12 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றதையடுத்து, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ திருச்செந்தூா் தொகுதி மக்களை சனிக்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

வீரபாண்டியன்பட்டணம், திருச்செந்தூரில் தொண்டா்கள், பொதுமக்கள் எம்எல்ஏவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா். திருச்செந்தூா் பழைய நகராட்சி அலுவலகம் முன் கூடி இருந்த தொண்டா்கள், பொதுமக்களுக்கு அவா் நன்றி தெரிவித்தாா். அப்போது அங்கே சிலம்பாட்டம் ஆடிய சிறுவா்கள் மத்தியில், எம்எல்ஏ உற்சாகமாக சிலம்பம் ஆடினாா். தொடா்ந்து, காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

Story image

திமுக இளைஞா் அணி மாவட்ட அமைப்பாளா் ராமஜெயம், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், நகரச் செயலா் வாள் சுடலை, நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, உறுப்பினா்கள் செந்தில்குமாா், தினேஷ்கிருஷ்ணா, சுதாகா், ரேவதி, முத்துஜெயந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.