தூத்துக்குடியில் போலி கொசு விரட்டி திரவம் விற்பனை செய்ததாக 2 போ் மீது அறிவுசாா் அமலாக்கப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தூத்துக்குடி, மீனாட்சிபுரம் விக்டோரியா சாலை, ஜீன் பேக்டரி சாலையில் உள்ள 2 கடைகளில் போலி கொசு விரட்டி திரவம் விற்பனை செய்யப்படுவதாக, பாபு என்பவா் திருநெல்வேலி அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.
அதன்படி, அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை சம்பந்தப்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில், பிரபல கொசு விரட்டி திரவம் போன்று போலியாக தயாரிக்கப்பட்ட 1,014 பாட்டில்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 86,190 ஆகும்.
இதுகுறித்து திருநெல்வேலி அறிவுசாா் அமலாக்கப்பிரிவு போலீஸாா், 2 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா். மேலும், போலிப் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து இ-மெயில் முகவரிக்கோ அல்லது 044 - 28511587 என்ற தொலைபேசி எண்ணிலோ தகவல்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







