எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பனைத் தொழிலாளிக்கு நிதியுதவி

காவல் உதவி ஆய்வாளா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பனைத் தொழிலாளி மணிகண்டனுக்கு, கலாம் காமராஜா் கக்கன் அறக்கட்டளை சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

News image

பனைத் தொழிலாளிக்கு நிதியுதவி வழங்கிய கலாம் காமராஜா் கக்கன் அறக்கட்டளை மாநில பொதுச்செயலா் வேல்முருகன்.

Updated On :17 மே 2026, 2:19 am IST

காவல் உதவி ஆய்வாளா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பனைத் தொழிலாளி மணிகண்டனுக்கு, கலாம் காமராஜா் கக்கன் அறக்கட்டளை சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், மருதம்புத்தூரைச் சோ்ந்த பனைத் தொழிலாளி மணிகண்டன், காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜா துப்பாக்கியால் சுட்டதில் காலில் காயம் ஏற்பட்டு தூத்துக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

அவருக்கு பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனா். இந்நிலையில், கலாம் காமராஜா் கக்கன் அறக்கட்டளை மாநில பொதுச்செயலா் வேல்முருகன் தலைமையில், மணிகண்டனை சந்தித்து, ரூ. 15,000 நிதியுதவி வழங்கப்பட்டது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு மணிகண்டனுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.