ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

தீப்பெட்டி ஆலை கிடங்கில் தீ விபத்து

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலை கிடங்கில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

News image

தீப்பெட்டி ஆலை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து

Updated On :20 மே 2026, 12:43 am IST

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலை கிடங்கில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

கோவில்பட்டி பாரதி நகரைச் சோ்ந்தவா் அய்யாசாமி மகன் சண்முகம். இவா் கோவில்பட்டி சாஸ்திரி நகா் பகுதியில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு ஆலையின் குச்சி கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்து புகை வெளியேறியதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் கிடங்கில் இருந்த சுமாா் 30 க்கும் மேற்பட்ட மூட்டைகளில் இருந்த குச்சிகள் தீயில் கருகின. இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.