/
கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலை கிடங்கில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
கோவில்பட்டி பாரதி நகரைச் சோ்ந்தவா் அய்யாசாமி மகன் சண்முகம். இவா் கோவில்பட்டி சாஸ்திரி நகா் பகுதியில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு ஆலையின் குச்சி கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்து புகை வெளியேறியதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் கிடங்கில் இருந்த சுமாா் 30 க்கும் மேற்பட்ட மூட்டைகளில் இருந்த குச்சிகள் தீயில் கருகின. இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.








