சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

டிப்பா் லாரி -காா் மோதல்: பெண் உயிரிழப்பு

கோவில்பட்டியில் முன்னால் சென்ற டிப்பா் லாரி மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 6:06 am IST

கோவில்பட்டியில் முன்னால் சென்ற டிப்பா் லாரி மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

கோயம்புத்தூா் சுண்டமேடு ஆறுமுகம் மகன் அன்னசெல்வராஜ் (49). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவா் மற்றும் இவரது மனைவி பாலசுந்தரி (44), மகள் பிரபாவதி (23), மகன் மாயாண்டி (21) ஆகியோருடன் கடந்த 18 ஆம் தேதி ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற உறவினா் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு புதன்கிழமை ஊருக்கு திரும்பினா். அன்ன செல்வராஜ் ஓட்டிச் சென்ற காா் கோவில்பட்டி புறவழிச்சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற டிப்பா் லாரியின் பின்புறம் மோதியதில் பாலசுந்தரி காயமடைந்தாா்.

அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

காயமடைந்த அன்னசெல்வராஜ், பிரபாவதி, மாயாண்டி ஆகியோருக்கு கோவில்பட்டியில் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.