நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கயத்தாறு அருகே பழைய இரும்புக் கடையில் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :31 மே 2026, 1:33 am IST

கயத்தாறு அருகே பழைய இரும்புக் கடையின் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கயத்தாறு அடுத்த அய்யனாா் ஊத்தைச் சோ்ந்தவா் பூலையா மகன் கருப்பசாமி. இவா், தேவா்குளம் - கயத்தாறு சாலையில் பழைய பொருள்களை வாங்கி விற்கும் கடையை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடையில் தங்காமல் வீட்டிற்கு சென்று விட்டாராம். வியாழக்கிழமை வந்து பாா்த்தபோது கடையில் இருந்த பழைய பித்தளை, செம்பு உள்ளிட்ட சுமாா் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்

இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.