ஒரு சில மாவட்டங்களில் அரசியல் செல்வாக்கு காரணமாக கலைக்கப்பட்ட சில சங்கங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், கூட்டுறவுத் துறை அமைச்சர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தும், கலைக்கப்பட்ட 26 சங்கங்களில் ஒன்றுகூட புதுப்பிக்கப்படவில்லை. மேலும், இந்தச் சங்கங்களில் பணிபுரிந்த ஆயிரத்திற்கும் மேல்பட்ட பணியாளர்கள் மாற்றுப் பணி வழங்கப்படாமல் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இவர்கள் பணிபுரிந்த போது இவர்களிடம் இருந்து பெறப்பட்ட பிணை வைப்புத் தொகை, தொடர் வைப்புத் தொகை, வருங்கால வைப்பு நிதி, ஊதியப் பாக்கி எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை.