தஞ்சாவூர், ஜன. 8: தஞ்சாவூர் சிவாஜிநகரைச் சேர்ந்தவர் வேலு (69). இவர் கடந்த 3 ஆம் தேதி ஏபி நகரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து காயமடைந்தார். இதையடுத்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டட அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து தஞ்சாவூர் போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.