டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சிறப்பு எஸ்.ஐ.க்களின் குறை களையப்படுமா?

பேராவூரணி, ஜூன் 20:   தமிழக காவல் துறையில் தலைமைக் காவலர்களாக இருந்து சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டவர்களில் 35 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்புச் சலுகை அளிக்க வேண்டுமென கோரிக

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:00 am

கே. கான்முகமது

பேராவூரணி, ஜூன் 20:   தமிழக காவல் துறையில் தலைமைக் காவலர்களாக இருந்து சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டவர்களில் 35 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்புச் சலுகை அளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    தமிழகக் காவல் துறையில் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் பணியிடங்கள் குறிப்பிட்ட கால பணி மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டு வந்தது.

   கடந்த திமுக ஆட்சியில் 25 ஆண்டுகள் பணி முடித்த தலைமைக் காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 25 ஆண்டுகளுக்கு மேல் பணி முடித்த அனைத்து தலைமைக் காவலர்களும் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டனர்.

  1976 ஆம் ஆண்டிலிருந்து பணியில் சேர்ந்தவர்களுக்கும், 1986 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர்களுக்கும் ஒரே ஊதியம், ஒரே தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

  மேலும், 15 ஆண்டுகள் பணி முடித்த மகளிர் காவலர்களுக்கும் சிறப்பு உதவி ஆய்வாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.  35 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கும், 15 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கும் ஒரே தகுதியில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ள 35 ஆண்டுகள் பணி முடித்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களது பணிக் காலத்திற்கு ஏற்ற வகையில் பணி உயர்விலோ, ஊதிய உயர்விலோ வேறுபாடு இருக்க வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

  இதுகுறித்து 35 ஆண்டுகள் பணி முடித்து சிறப்பு உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்ற ஒருவர் கூறியது:

  கடந்த திமுக ஆட்சியில் தலைமைக் காவலர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு செய்யப்பட்டாலும், எங்களது பணிக் காலத்தை கணக்கில் கொள்ளாமல் பதவி உயர்வு அனைவருக்கும் ஒரே மாதிரியாக வழங்கப்பட்டது முறையற்றது.  25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணி புரிந்தவர்களுக்கு தகுதித் தேர்வு வைத்தாவது உதவி ஆய்வாளர் பணி வழங்க வேண்டும். 35 ஆண்டுகள் பணி முடித்தும் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு செய்யப்பட்டிருந்தாலும், இப்பொழுதும் தலைமைக் காவலர் பணியை மட்டுமே செய்யும் நிலையில் உள்ளோம்.   வருவாய் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தவர்கள் தங்களது பணிக் காலத்தில் பதவி உயர்வு பெற்று வட்டாட்சியர் பதவியை அடைகின்றனர். காவல் துறையில் மட்டும் காவலர் மற்றும் தலைமைக் காவலர்களுக்கான பதவி உயர்வு காலதாமதமாக அளிக்கப்படுகிறது. எனவே, தமிழக அரசு 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து பதவி உயர்வு பெற்றவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.