கரூர், ஏப். 5: கரூரில் செயல்பட்டு வந்த பல சாயப்பட்டறைகள் மூடப்பட்டதால், இவற்றில் பணியாற்றி வந்த தொழிலாளர்களுக்கு கட்டுமானப் பணிகள் தற்போது வாழ்வாதாரமாக உள்ளது.
கடந்த 3 மாதங்களாக சாயப்பட்டறைகள் மூடப்பட்ட நிலையில், இவற்றில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் தற்போது கட்டடப் பணியை நோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
கரூர் பகுதியில் பல இடங்களில் தற்போது கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், சாயப்பட்டறைகளில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக வேலை கிடைக்கிறது. மேலும், கூடுதலான ஊதியமும் கிடைக்கிறது. பெண்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 200 முதல் ரூ. 250 வரை ஊதியம் கிடைப்பதால், அவர்களும் கட்டட வேலைக்குச் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். கட்டடப் பணிக்கு ஆள்கள் பற்றாக்குறையாக இருந்ததால், பணிகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலாத நிலை இருந்து வந்தது. தற்போது, வேலையின்றி இருந்த சாயப்பட்டறைத் தொழிலாளர்கள் கட்டட வேலைக்கு வருவதால், கட்டடப் பணிகளை விரைவாக மேற்கொள்ள முடிகிறது என்கிறார் கரூரைச் சேர்ந்த கட்டுமான ஒப்பந்ததாரர்.
கரூர் சின்ன, பெரிய ஆண்டான்கோவில், கொடிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 700 சாயப்பட்டறைகள் இயங்கி வந்தன. இவற்றில் முறையான சுத்திகரிப்பு வசதி செய்யாததால், இவற்றின் கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலந்தது.
இதனால், ஆற்றுப் பாசனம் மூலமாக விவசாயம் செய்து வந்த விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அந்தப் பகுதிகளில் எவ்வித விவசாயப் பணிகளும் மேற்கொள்ள முடியாத நிலை இருந்து. இந்தப் பிரச்னை தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனாலும், நீதிமன்ற உத்தரவை பல இடங்களில் சாயப்பட்டறைகள் அமல்படுத்தாமல் இருந்தன.
இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து, முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி செய்யாத சுமார் 474 சாயப்பட்டறைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, பின்னர் சீல் வைக்கப்பட்டது. மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. 8 பொது சுத்திகரிப்பு நிலையங்களும் மூடப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

