: திருச்சி மாவட்ட ராக்போர்ட் செஸ் அகாதெமி, மாவட்ட பாஜக இணைந்து முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த அரங்கராஜன் குமாரமங்கலம், பாஜக மாநகர் மாவட்ட முன்னாள் தலைவர் டாக்டர் ---தர் ஆகியோர் நினைவு மாவட்ட அளவிலான செஸ் போட்டி உறையூர் எஸ்.எம். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இதில் 7, 9, 11, 13 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் என 5 பிóரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பாஜக மாவட்ட விளையாட்டுப் பிரிவுத் தலைவர் டி. பாலசுப்பிரமணி தலைமை வகித்தார்.
பாஜக மாநிலச் செயலர் எம். சுப்பிரமணியம், மாநில விளையாட்டுப் பிரிவுத் தலைவர் பி.ஏ. அருள்மணி, மாவட்டத் தலைவர் பார்த்திபன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கந்தசாமி, பள்ளித் தலைமையாசிரியர் எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









