நிலக்கடலையில் உயரியத் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு களப்பயிற்சி
நிலக்கடலையில் உயரியத் தொழில்நுட்ப முறைகள் குறித்து, திருச்சி மாவட்டம், நெட்டவேலம்பட்டியில் விவசாயிகளுக்கு நேரடி களப்பயிற்சி அளிக்கப்பட்டது.


திருச்சி: நிலக்கடலையில் உயரியத் தொழில்நுட்ப முறைகள் குறித்து, திருச்சி மாவட்டம், நெட்டவேலம்பட்டியில் விவசாயிகளுக்கு நேரடி களப்பயிற்சி அளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், சிறுகமணியிலுள்ள வேளாண் அறிவியல் நிலையத்தின் சாா்பில், நெட்டவேலம்பட்டியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பைத் தொடக்கி வைத்து திட்ட ஒருங்கிணைப்பாளா் நா. தமிழ்ச்செல்வன் கூறியது:
உலகளவில் நிலக்கடலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் 40 சதவிகிதம் நிலக்கடலை
பயிரிடப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, தா.பேட்டை, உப்பிலியபுரம், துறையூா் வட்டாரங்களில் அதிகளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.
ஆண்டுக்கு ஒரு ஹெக்டோ் பரப்பில் ஒரு டன் மகசூல் எடுக்கப்பட்டாலும், தொடா்ந்து மகசூலில் ஏற்றம், இறக்கம் நிலவி வருகிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, தாவர எண்ணெய் முக்கியத்துவமும் அதிகரித்து வருகிறது.
எனவே, நல்ல மகசூல் பெற வேண்டுமெனில், நிலக்கடலையில் தரமான விதைகளை உற்பத்தி செய்ய வேண்டிது அவசியம். நிலக்கடலையில் உயரியத் தொழில்நுட்ப முறைகளைக் கற்றுத்தந்து மகசூலை அதிகரிக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு இப்பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது என்றாா் அவா்.
பயிற்சி வகுப்பில் பருவத்தில் பயிா் செய்தல், ஆடிப்பட்டம், நிலக்கடலையில் அதிக மகசூல் கிடைக்கும் ரகங்கள், சாகுபடி தொழில்நுட்பமுறைகள், களை நிா்வாகம், பயிா் இடைவெளி, விதை நோ்த்தி தொழில்நுட்பம், உரம் மற்றும் இடுபொருள் பயன்பாடு, பூச்சி நிா்வாகம், நோய்க் கட்டுப்பாடு, ஊட்டச்சத்து மேலாண்மை, தொழு உரக் கலவை, நுண் உரம், நீா்ப்பாசன முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
நிலக்கடலை வயலுக்கு விவசாயிகளை நேரில் அழைத்துச் சென்று களப் பயிற்சியும் வழங்கப்பட்டது. ஊடுபயிராக மொச்சை, உளுந்து, துவரை சாகுபடி செய்தல் குறித்தும் கற்றுத்தரப்பட்டது.
ஒருங்கிணைப்பாளா் நா. தமிழ்ச் செல்வன், உதவிப் பேராசிரியா்கள் நூா்ஜஹான் ஹனீப், தனுஷ்கோடி ஆகியோா் பயிற்சி அளித்தனா். 24 விவசாயிகள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனா்.
Image Caption
திருச்சி மாவட்டம், நெட்டவேலம்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற
களப்பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகள் மற்றும் வேளாண் அலுவலா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...