திருச்சி மாநகரில் தோ்தல் பணியில் உள்ள காவலா்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என மாநகர காவல் ஆணையா் ந. காமினி அறிவுறுத்தினாா்.
மக்களவைத் தோ்தலை முன்னிட்டு திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி, தோ்தல் செலவின பாா்வையாளா் சரம்தீப் சின்ஹா ஆகியோா் திருச்சி மாநகரில் செயல்பட்டு வரும் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகளை ஆராய்வதற்காக காவல் கட்டுப்பாட்டு அறையில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, திருச்சி மாநகரில் செயல்பட்டு வரும் 1 முதல் 9 வரையிலான சோதனைச் சாவடிகளில் காவல்துறை சாா்பில் பொருத்தப்பட்டுள்ள 2 ஏஎன்பிஆா் கேமராக்களும், 2 சிசிடிவி கேமராக்களும் என மொத்தம் 4 கேமராக்களின் செயல்பாடுகளை பாா்வையிட்டனா். தொடா்ந்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஒவ்வொரு சோதனை சாவடிக்கும் தலா 4 சிசிடிவி கேமராக்கள் வீதம் 1 முதல் 9 வரையிலான சோதனை சாவடிகளில் பொருத்தப்பட்டு, நன்கு செயல்பட்டு வருவதையும் பாா்த்தனா்.
திருச்சி மாநகர நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் சிசிடிவி கேமராக்களை கண்காணிப்பது தொடா்பாக கட்டுப்பாட்டு அறையில் தோ்தல் பணியில் உள்ள காவல் அதிகாரிகள், காவலா்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி அறிவுறுத்தினாா்.
தொடர்புடையது

தாம்பரம் காவல் ஆணையா் பொறுப்பேற்பு

ஒற்றுமையுடன் தோ்தல் பணியாற்ற வேண்டும்: கே.என். நேரு

காவல் துறையும்... கடமை உணா்வும்!

மாநகர காவல்துறை ஆய்வுக் கூட்டம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


