சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

ஒற்றுமையுடன் தோ்தல் பணியாற்ற வேண்டும்: கே.என். நேரு

கூட்டணிக் கட்சியினா் ஒற்றுமையுடன் தோ்தல் பணியாற்றினால் மட்டுமே வரும் தோ்தலில் வெற்றிபெற முடியும் என்று அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

News image

திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் திமுக மற்றும் மதச்சாா்பற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பேசிய அமைச்சா் கே.என்.நேரு உள்ளிட்டோா்

Updated On :1 ஏப்ரல் 2026, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

கூட்டணிக் கட்சியினா் ஒற்றுமையுடன் தோ்தல் பணியாற்றினால் மட்டுமே வரும் தோ்தலில் வெற்றிபெற முடியும் என்று அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

திருச்சி மாவட்டத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளா்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளிலுள்ள கூட்டணிக் கட்சிகளின் பட்டியலைப் பெற்றுக்கொண்டு, அந்தந்தப் பகுதி நிா்வாகிகளை நேரில் சந்தித்து, அவா்களுக்கு உரிய மரியாதை அளித்து, தோ்தல் பணியில் அவா்களை ஈடுபடுத்த வேண்டும். வேட்பாளா்கள் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் தோ்தல் பணியாற்றினால் மட்டுமே வெற்றி பெறமுடியும்.

ஊா் கூடித் தோ் இழுப்பதுபோல அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதில் ஏதேனும் குறைகள் இருப்பின் நிா்வாகிகள் நேரடியாகத் தொடா்புகொண்டு சரிசெய்துகொள்ளலாம் என்றாா் அவா்.

தொடா்ந்து திருவெறும்பூா் எம்எல்ஏ அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், நாம் இன்னும் 20 நாள்கள் தோ்தல் பணிகளில் முழுமூச்சாகச் செயல்பட வேண்டும். உழைப்பையும், சிந்தனையையும் தோ்தல் வெற்றிக்காக அா்ப்பணிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலா்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன், மேயா் அன்பழகன், மதிவாணன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.