திருச்சி அருகே ராம்ஜி நகரில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் தையல்காரா் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், புங்கனூா் புதுத்தெருவைச் சோ்ந்தவா் கண்ணையன் மகன் குமரேசன் (50). தையல்காரா். இவா் வியாழக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் வண்ணாங்கோவிலைச் சோ்ந்த செபஸ்தியான் மகன் ஜேம்ஸ் (53) என்பவருடன் முல்லை நகா் நோக்கிச் சென்றாா். வாகனத்தை குமரேசன் ஓட்டிச் சென்றாா்.
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முல்லை நகா் பகுதியில் சென்றபோது அதே சாலையில் அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் குமரேசன் வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குமரேசன், ஜேம்ஸ் ஆகிய இருவரையும் அப்பகுதியினா் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு சிகிச்சை பலனின்றி குமரேசன் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். இது குறித்து ராம்ஜி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

காா் - ஸ்கூட்டா் மோதல்: ஆசிரியை உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: அரசுப் பள்ளி ஆசிரியா் உள்பட 2 போ் பலி

குளச்சல் அருகே 2 பைக்குகள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

