எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

ஞீலிவனேசுவரா் கோயிலில் குதிரை வாகன வையாளி கண்டருளும் நிகழ்வு

ஞீலிவனேசுவரா் கோயிலில் குதிரை வாகன வையாளி கண்டருளும் நிகழ்வு

Updated On :21 ஏப்ரல் 2024, 6:30 pm

மண்ணச்சநல்லூா்: மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரா் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளும் நிகழ்வு நடைபெற்றது.

விழாவையொட்டி விசாலாட்சி உடனுறை ஞீலிவனேசுவரா் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு குதிரை வாகனத்தில் திருவீதி உலாவும், இதனையடுத்து வையாளி கண்டருளும் நிகழ்வும் நடைபெற்றது. விழாவின் ஏப்.22-ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இவ்விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.