தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

Updated On :26 ஏப்ரல் 2024, 7:53 pm

திருச்சி, ஏப். 26: திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே தட்டக்குடி மலையடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மூக்கையா மகன் செல்வராஜ் (20). இவா், திருச்சியில் தனியாா் பேருந்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தாா்.

இவா் வெள்ளிக்கிழமை காலை நண்பரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள கடையில் சாப்பிட்டு விட்டு, சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த லாரி செல்வராஜின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த செல்வராஜை அருகிலிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், செல்வராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.