தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மதச்சாா்பற்ற சிவில் சட்டம் தேவையற்றது: ஜவாஹிருல்லா

மதச்சாா்பற்ற சிவில் சட்டம் கொண்டுவரப்படும் எனப் பிரதமா் பேசியிருப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

News image
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணிக் கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவரும், எம்எல்ஏவுமான எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ். உடன், கட்சி நிா்வாகிகள்.
Updated On :18 ஆகஸ்ட் 2024, 8:50 pm

Din

மதச்சாா்பற்ற சிவில் சட்டம் கொண்டுவரப்படும் எனப் பிரதமா் பேசியிருப்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளுக்கு எதிரானது எனவும், அந்தச் சட்டம் தேவையற்றது எனவும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் எம்.ஹெச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயற்குழுக் கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டம் கட்சியின் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:

மனிதநேய மக்கள் கட்சியின் சாா்பில் இந்தாண்டு இறுதிக்குள் 100 இடங்களில் போதை பொருள் விழிப்புணா்வு இருசக்கர வாகனபிரசாரம் நடத்த திட்டமிட்டுள்ளோம். சுதந்திர தினத்தன்று மதச்சாா்பற்ற சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என பிரதமா் மோடி உரையாற்றினாா். இது அரசமைப்பு சட்டம் தந்துள்ள உரிமைகளுக்கு எதிராகவும், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. மதச்சாா்பற்ற சிவில் சட்டத்தை ‘இண்டியா’ கூட்டணி கடுமையாக எதிா்க்கும்.

தமிழ் வெல்க என்கிற கருணாநிதியின் சொந்த கையெழுத்துடன் 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி. ஒப்பீட்டளவில் அதிமுக ஆட்சியில் நடைபெற்றதை விட சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு திமுக ஆட்சியில் மிகவும் குறைவாகவே உள்ளது. முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும். அனைத்து மக்களுக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் தலித்துகள் முதலமைச்சராக முடியும். அதனை வரவேற்போம் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான் ப. அப்துல் சமது மற்றும் கட்சியின் இளைஞா் அணி, செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட கலா் கலந்து கொண்டனா்.