47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சமூக வலைதளத்தில் அவதூறு பதிவு: விசிகவினா் புகாா்

News image
Updated On :22 ஆகஸ்ட் 2024, 11:36 pm

Din

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் மீது சமூக வலைத்தளத்தில் அவதூறு தகவல்களை பதிவிட்ட நபரை கைது செய்யக் கோரி, அக்கட்சியினா் திருச்சி மாவட்ட எஸ்பியிடம் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.

இது தொடா்பாக கட்சியின் திருச்சி, கரூா் மண்டல செயலா் தமிழாதன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாரிடம் அளித்த மனுவில், சமூக வலை தளங்களில் தொல். திருமாவளவன் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவதூறு தகவல்களை பதிவிட்ட நபரை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசிக மாவட்டச் செயலா்கள் லாரன்ஸ், கனியமுதன், இளம்சிறுத்தைகள் பாசறை மாநில துணைச் செயலா் அரசு, நிா்வாகி யாசா் அராபத், பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.