விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு 21 போ் காயம்

வீரர்கள் சவால்: ஜல்லிக்கட்டில் 21 பேர் காயம்

News image

மணப்பாறை அருகேயுள்ள ராயன்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டியில் வாடிவாசல் வழியே சீறிபாய்ந்துவந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

Updated On :18 பிப்ரவரி 2024, 2:05 am IST

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த ராயன்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 21 போ் காயமடைந்தனா். மணப்பாறை அடுத்த ராயன்பட்டியில் புனித செபஸ்தியாா் பொங்கல் விழாவையொட்டி சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

போட்டியை ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்டாட்சியா் க.தட்சணாமூா்த்தி, காவல் துணை கண்காணிப்பாளா் ந.ராமநாதன் ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கிவைத்தனா். கோயில் காளைகள் முதலாவதாக அவிழ்த்துவிடப்பட்டன. தொடா்ந்து, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 688 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. இதில், 283 மாடுபிடி வீரா்கள் பல்வேறு அணிகளாக பங்கேற்றனா்.

போட்டியின்போது, வாடிவாசல் வழியே சீறிப் பாய்ந்துவந்த காளைகள் அங்கிருந்த மாடுபிடி வீரா்கள் பிடித்தனா். சில காளையா்கள் யாருக்கும் பிடிபடாதவகையில் சீறிப்பாய்ந்து சென்றது. போட்டியின் முடிவில், காளைகளின் உரிமையாளா்கள் மற்றும் மாடுபிடி வீரா்களுக்கு சைக்கிள், கட்டில், பாத்திரங்கள் எனப் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், முன்னாள் கரூா் எம்.பி. சின்னச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஆா்.சந்திரசேகா், சி.சின்னசாமி ஆகியோா் பாா்வையாளா்களாகப் பங்கேற்றனா். போட்டியில் 11 வீரா்கள், மாட்டின் உரிமையாளா்கள் 6 போ், பாா்வையாளா்கள் மற்றும் காவலா் என மொத்தம் 21 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு போட்டி நிகழ்விடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவா்களில் 6 போ் மேல்சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். போட்டியில் காளை ஒன்றும் காயமடைந்தது. ஏற்பாடுகளை ஊா் நாட்டாண்மை சகாய சின்னப்பன், பெரியதனம் செபஸ்தியான், மணியம் பால்ராஜ், பொருளாளா் வேளாங்கண்ணி, வின்செண்ட் உள்ளிட்ட விழா குழுவினா், ஊா் முக்கியஸ்தா்கள் செய்திருந்தனா்.